பனை மரம்! எங்கள் பாரதத்தின் உயிர் வரம்


பனை மரம்


"தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்"

முகவுரை:

திருவள்ளுவரின் கூற்று படி ஒருவன் திணை அளவிற்கு நன்றி நமக்கு செய்தாலும், அதனை சிறிது என்று எண்ணி மறவாமல் அந்த உதவியை பண அளவிற்கு செய்வதே சாலச் சிறந்தது.

உலக மொழிகளுக்குகெல்லாம் ஆதி மொழியாம் நம் தாய் மொழியான தமிழ் மொழியின் சிறப்பை பூவுலகத்திற்கு பிரதிபலிக்க, இயற்கையாகவே இப்புவியில் வளர்ந்து இன்பமயமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் இந்தப் பனை மரம், பழந்தமிழ் மக்களின் பாரம்பரியமானதாகவும், பண்பாட்டின் படைப்பாகவும், தமிழ்நாட்டின் உயிர்த் துடிப்பாகவும் விளங்குவதே!

பனை மரம்:

தேசிய மரம்” நம் தமிழகத்தின் பனைமரம். புலவர்கள், சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் பழம்பெருமை வாய்ந்த சங்க இலக்கியம், புராணம், இதிகாசம், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய நூல்களை பனை ஓலைகளில் சாசனம் செய்து வருங்கால தலைமுறைக்கு பரிசளித்தனர். 

கூரை குடிசைகளின் கோபுரமாக திகழ்ந்த கற்பக விருட்சம் (பனைமரம்) பல தலைமுறைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக  அமைந்தது. 30 முதல் 60 அடிக்கு மேல் வளர்ச்சி அடைந்து பனை ஓலைகள் வட்டவடிவமாக பரந்து காணப்பபட்டு, பனை மரம் எங்கள் பாரதத்தின் உயிர் வரமாக  இயற்கையின் புகழை உயர்த்தி தமிழ் பூமியின் பெருமையை நிலைநாட்டியது.

விரிவுரை:

பனை மரத்தின் சில வகைகள்:

ஆண் பனை, பெண் பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை,  கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை,கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம்பனை முதலியன.

பல சிறப்புக்களும் பெருமைகளும் வாய்ந்த பனைமரம், அடி முதல் நுனி வரை ஆற்றல் வாய்ந்த பனை குறுத்திலிருந்து செய்யப்பட பூச்சாடிகள், சிறு பெட்டிகள், பனை உரை, பனை ஓலை, பாய்கள், துடைப்பம், பனை ஓலை நாரிலிருந்து செய்த கயிறுகள், விசிறி, குடை, தடக்குகள் பனை மரத்திலிருந்து  சிறு கழியாக (உருட்டு) செய்து கூரை வேய (கட்ட) உறுதுணையாகவும் திகழ்ந்தது.

மேலும் பனை ஓலைகளால் வேயப்பட்ட கூரையில் சூரிய வெப்பத்தைத் தடுத்து குடிசைக்குள் இளம் காற்றோட்டமாக இருக்க உதவியதே இந்த பனை மரம்.

மருத்துவ குணம் நிறைந்த பனைமரம்:

பனை மரம்! எங்கள் பாரதத்தின் உயிர் வரம்

மனித வாழ்விற்கு உடல் ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருந்து வரும் பணம் குறுத்து, பணங்கள், பனை நுங்கு, பனம்பழம், பதநீர், பனங்கிழங்கு முதலியவை  சத்துக்கள் நிறைந்ததாகவும், உடல் வெப்பத்தையும் குறைத்து நல்வாழ்வு வாழ வழி செய்கிறது.

பணம் குறுத்து:
  • இளம் குருத்துக்களில் இருக்கும் இதழை உண்ணுவதால் உடலில் உள்ள உறுப்புகளின் உத்வேகம் வலிமை பெற தூண்டுதலாக அமைகிறது.
பனை நுங்கு
  • வயிற்றுப் பகுதியில் ஏற்படும் உடல் செரிமான கோளாறுகள் உடலின் வெப்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
பனம்பழம்:
  • பனம் பழத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின் என்கிற வைட்டமின் சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் கண்பார்வைக்கு மிகவும் அவசியமானதாகிறது.
பனங்கிழங்கு:
  • மண் சட்டியில் வேக வைத்து வெப்பம் உலர்ந்த பிறகு உண்ணுவதால் நார் மற்றும் புரதச் சத்துக்களும் உடலுக்கு இன்றியமையானதாக அமைகிறது.
பதநீர்:
  • கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச் சத்து, மிகுதியாக காணப்படுகிறது பதநீர் அருந்துவதால் உடல் வெப்பம், வயிற்றுப்புண், குடல் போன்ற நோய்களுக்கு தீர்வு அளிக்கிறது. எலும்புகள் வலுப்பெற இயற்கை மருந்தாகும்.
பனங்கற்கண்டு:
  • சளி, இருமல், தொண்டைப்புண், வாத பித்தம் போன்ற பிரச்சினையை தீர்க்க வல்லமையுடையது. 
பதநீரிலிருந்து உருவாக்கப்பட்ட கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனமிட்டாய், பணம் கூழ் போன்ற பல்வேறு வகையில் உணவு பொருட்களை உற்பத்தி செய்து உலகெங்கும் வலம் வர ஊன்றுகோலாய் உருவானதே நம் தாய் மரமான பனை மரம்.

நம் தாய்நாடான தமிழ்நாட்டில் மிகுதியாக காணப்பட்டாலும், அதில் மிகவும் வளர்ச்சியடைந்த நிலையில் உள்ள நெல்லை, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, போன்ற மாவட்டங்களில் இன்றளவிலும் பராமரித்து வருகினறனர்.

இவ்வகையான மரங்கள் இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா மற்றும் கொங்கோ போன்ற பல அயல் தேசங்களில் காணப்பட்டு வருகின்றன.

முடிவுரை: 

தமிழ் மொழியை தாய்மொழியாக உலகிற்கு கூறும் பனை மரம் நம்  பாரதத்தின் உயிர் வரமாக  திகழ்ந்து வருகிறது. 

விதை விதைப்பது நம் கடமையாகும், முளைத்தால் மரமாகட்டும் இல்லையெனில் மண்ணிற்கு உரமாகட்டும்.

Previous Post
Next Post

Agriculture,Farming,Cultivation,Plants,Sowing, Organic Farming,Natural Resources,Earth Resource,Natural Medicine,Antiquity,Tamil Language,Tamil literature,Adi period,Siddhars